தமிழ்நாடு மின்வெட்டு
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மின்வெட்டு தொடர்வதற்கும் அதிகரிப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன. எதிர்கால மின்தேவையை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்படவில்லை. பராமரிப்பு, விநியோகத்தில் மின்வாரிய அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை. புதிய மின்னுற்பத்திக்கான இடங்களையும் வழிமுறைகளையும் அடையாளம் காண மாநிலத்தில் தனி ஆராய்ச்சிப்பிரிவு ஏதும் இல்லை. மின் சிக்கனம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி வருகிறோம். மின்வெட்டு அதிகமாக இருக்கும் இக்காலத்திலும் தெரு விளக்குகளை காலையில் வெளிச்சம் நன்கு ஏற்பட்ட ஒரு மணி நேரம் கழித்தபிறகு கூட அணைக்காமல் விரயம் செய்கின்றனர். அதிக மின்சாரத்தை இழுத்து ஒளியைத் தரும் சோடியம் ஆவி விளக்குகள், மெர்க்குரி விளக்குகள், ஹாலோஜன் விளக்குகள் இன்னமும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை மாற்றி, குறைந்த மின்சாரத்தில் அதிக ஒளிதரக்கூடிய எல்.இ.டி., பவர் சேவர் சி.எஃப்.எல். விளக்குகளைப் பொருத்தலாம். சூரிய சக்தியில் ஒளிதரும் சோலார் லேம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இதனால் 500 மெகாவாட் மின்சாரம் மிச்சப்படும். சமையல் கேஸ் சப்ளையை மத்திய அரசு குறைத்துவருவதால் எல்லோரும் மின